தேடும் கண்களே… தேம்பும் நெஞ்சமே… | Tamil Short Story

அந்தப் பேனா முனை வெள்ளைத் தாளின் மீது ஒரு அசைவுமின்றி ஒரே இடத்தில் குத்தி நின்றுகொண்டிருந்தது. சிந்தனைகள் தடைபட்டு நின்றதால் நீண்ட நேரம் எழுத முடியாமல் அப்படியே அமர்ந்தபடி தன் மேசைக்கு நேராக மேலே சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் மாலையிட்ட படத்தை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், கவின். அவன் அப்பா இறந்தபோதுக்கூட அவனுக்குள் இத்தனை சோகம் மூளவில்லை. அப்பா என்றால் என்ன என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத மூன்று வயதில் அவர் இறந்தார் என்பதால் அப்படி அழவில்லை என இன்றுவரை தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறான். என்றாவது அப்பாவை மீண்டும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால் அவரை இறுக்கி அணைத்து ஆரத்தழுவி கதறி அழவேண்டும் என அவனுக்குத் தீராத ஆசை.