காதலுக்குப் பாதகம் விளைவிக்க கோபம், அகந்தை, பொறாமை, காலம், மொழி, இனம் என இயற்கை பலவற்றை உருவாக்கியிருக்கிறது. மனிதனும் தன் பங்குக்கு சாதியையும் மதத்தையும் உருவாக்கிவைத்திருக்கிறான். உலகின் பெரும்பாலான காதல் தோல்விகளுக்குக் காரணங்கள் இவைதாம். ஆனால், இந்தக் காதல் கதையின் முடிவுக்கு ஒரு எஸ்கலேட்டரின் படிகட்டுகள்தாம் காரணம்.