அடேய் சந்தோஷ்,
கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் பகுத்தறிவுக்குப் புலப்படாத உணர்வாகவே இருந்துவந்தது. இப்போதும் அப்படியே இருக்கிறது என்றே நம்புகிறேன். பல முறை காதலில் விழுந்து, எழுந்தவன் என்றபோதிலும் இந்த வகைக் காதல் கதைகள் மட்டும் உன்னை எப்போதும் வேடிக்கைக்குள்ளேயே ஆழ்த்தியிருக்கின்றன.