Friday, 11 November 2016

செல்லாக்காசும் மீத்தேன் திட்டமும்: சூழ்ச்சிக்கான விதையா?

ஒவ்வொரு முறையும் பாஜக அரசு தமிழகத்திலுள்ள எதாவதொரு சிக்கலைக் கையாளும்போதுமட்டும் புதியவொரு உத்தியை செயல்படுத்த முயன்று, பிறகு இங்கே நடக்கும் அரசியல் மற்றும் விவசாயிகள் போராட்டங்களைக் கண்டு அஞ்சி பின்வாங்கிவிடும். அல்லது காவிரிப் பிரச்சினையில் செய்தது போல் வாரியம் அமைக்கமுடியாது என்று ஒற்றைக்காலில் நின்றுவிடும்.

Thursday, 10 November 2016

சோழநாடு சோறுடைத்து - ஒரு அனுபவம்

இன்று மதிய உணவுக்காக நகரத்தின் பல உணவகங்களைத் தேடி எந்த உணவக்காரருக்கும் பணத்தாளை நீட்டி சிரமத்தை கொடுக்கக்கூடாதென்ற நோக்கில் இறுதியாக தில்லைநகரில் உள்ள ரசிகாஸ் உணவகத்தை வந்தடைந்தேன். பணத்தாள் இல்லாவிடினும் அங்கே பற்றட்டை (Debit Card) தேய்த்தேனும் கட்டணம் செலுத்தலாம் என்றறிந்தே சென்றேன்.