ஒரு கதை, இரு வேறு ஊடகங்களின் வாயிலாகவோ, இரு வேறு மொழிகளிலோ சொல்லப்பட்டால், இரண்டும் வெவ்வேறு படைப்புகளாகத்தான் கருதப்படவேண்டும். புதினமாக இருக்கும் ஒருக் கதை மேடை நாடகமாகலாம், அந்த நாடகம் பாவைக்கூத்தாகலாம், அந்தக் கூத்து திரைப்படமாகலாம். எல்லாவற்றிலும் கதை ஒன்றாக இருந்தாலும், எல்லாமே ஒரே படைப்பல்ல. நாவல்களைப் படித்துவிட்டு, அவற்றைப் படங்களாகப் பார்க்கும்போது, இது நாவலில் இல்லையே, என்ற கேள்வியோ கருத்தோ எழுந்தால், உங்களின் முன்முடிவுகளை நீங்கள் மறுபரிசீலனைக்கு அனுப்பவேண்டும்.