Saturday, 7 December 2013

இராமாயணத்தின் பின்னணி தான் என்ன???



இந்த கட்டுரை தமிழ் தேசிய தமிழர் கண்ணோட்டம் என்ற மாத இதழின் அக்டோபர் 2013 இதழில் இடம் பெற்ற ஒரு தொடரில் இருந்து உருவானது....



  மகாபாரதத்திற்குப் பிறகு உலகின் மிக பழமையான புராணமாகக் கருதப்படுவது இராமாயணம். அது வடமொழியில்(சமஸ்கிருதம்) வான்மீகி முனிவரால் பாடப்பெற்றது. அதை பல்வேறு இந்திய அக்கால புலவர்கள்  அவரவர் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அதில் ஒன்று தான் கம்பராமாயணம். அது ஒரு புறம் இருக்கட்டும்.



  அப்படிப்பட்ட இராமாயணம் உண்மையாக நடந்த நிகழ்வா? அல்லது கற்பனை கதையா? என்று இன்றும்  பலதரப்பட்ட உலக ஆய்வுகள் நடந்தேரிக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட சில ஆய்வுகளை பற்றி தொகுத்து ஒரு தொடரை அந்த மாத இதழில் இயற்றி இருக்கிறார் வழக்கறிஞர் வே. சிதம்பரம்.

 அவர் கூறுவதாவது,

  History of India Vol.Iஇல் பக்கம் 519இல் பேரா. சுப்பிரமணியன், இராமாயணம் ஒரு தத்துவ பொருள் கூறும் நூலும் இல்லை, வரலாறும் இல்லை. அது வெறும் ஒரு புராணம் தான். அது நடந்த கதை இல்லை.

 பேரா. பாஷம் கூறுவது என்னவென்றால் இராமன் ஒரு ஆர்யன். அவன் கோசலை நாட்டு இளவரசன். ஆனால் அவன் ஒரு கடவுளோ அல்லது அவதாரமோ கிடையாது. அவனை பற்றி வேறு குறிப்புகள் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் வெறும் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும். அதை பிற்காலத்தில் விரிவுபடுத்தி கிருத்துவ ஆண்டின் தொடக்கத்தில் இராமாயணமாக இயற்றபட்டிருக்க வேண்டும். அதிலும் அவன் கோசலை மன்னனா அல்லது காசி மன்னனா என்று கூட ஒரு குழப்பம் இருக்கிறது.

  வான்மீகி இராமாயணத்தை இயற்றுவதற்கு முன்பு அது ஜாதக கதைகள் என்ற பெயரில் தன இருந்தது. வான்மீகி அதை காப்பியமாக மாற்றி எழுதினார். அதில் இருப்பதாவது,

  தசரதன் வாரணாசி அரசன். இராமன், லக்ஷ்மன், சீதை ஆகியோர் அவனுடைய முதல் மனைவியின் பிள்ளைகள். அதாவது இராமனும் சீதையும் அண்ணன் தங்கை என்று கூறுகிறது. பரதன் அவர்களுடைய மாற்றாந்தாயின் மகன். மாற்றாந்தாயின் சதி திட்டத்தில் இருந்து இவர்கள் மூவரையும் காப்பாற்ற தசரதன் அவரகளை இமயமலைக்கு நாடுகடத்துகிறான்.  நாடுகடத்தப்படுவது 14 ஆண்டுகள் அல்ல, 12 ஆண்டுகளே.  நாடு திரும்பிய பின்னர், இராமன் தன் தங்கை சீதையையே திருமணம் செய்துகொள்கிறான். அதில் சீதை கடதபட்டதாகவோ, இராமன் பாலம் கட்டியதாகவோ, இலங்கை என்ற தீவு பற்றியோ எந்த குறிப்பும் இல்லை.

 வான்மீகி தனக்கு முன் வழங்கி வந்த இராமாயணத்தை தன் கற்பனை திறத்தால் மாற்றி எழுதினார் அன்று அவர் கூறுகிறார்.


அன்புடன்,

சந்தோஷ் மாதேவன்....

1 comment:

  1. jathaka kathaikal?...can you explain it's etymology ...cus iam not aware of it

    ReplyDelete